விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பாயும் புலி’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சினிமாவைத்தாண்டி விஷால் தன்னுடைய நற்பணி மன்றம் சார்பாக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் திருச்சி மாவட்டம் விஷால் நற்பணி மன்றம் சார்பில் 10 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்கள் கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார். அதுபோல் தற்போது ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட் புக்குகளை வழங்கியிருக்கிறார் விஷால்.
இதை தனது அகில இந்திய விஷால் நற்பணி மன்றம் சார்பாக வழங்கியிருக்கிறார். இவ்விழாவில் விஷாலுக்கு மாலை அணிவித்து அவருடைய ரசிகர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் விஷால் மாணவர்களுக்கு நோட் புக்குகளை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.