இப்படி இருக்கிற ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்குமாம்

உலகத்தில் உள்ள 700 கோடி மக்களிடமும் வேறுப்பட்டு இருக்கும் சில விஷயங்களில் அவரவர்களது மனோபாவமும் ஒன்று. ஒருவரது மனோபாவத்தை பொறுத்து தான் ஓர் உறவின் வலிமை அமைகிறது. கருத்து வேறுபாட்டின் காரணமாக சில உறவுகள் பிரிவதற்கும் கூட இந்த மனோபாவம் தான் காரணம்.

அந்த வகையில், சில மனோபாவம் உள்ள ஆண்களை பெண்கள் வெளிப்படையாக ரசிக்காவிட்டாலும், ரகசியமாக அவர்களை ரசிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த ஈர்ப்பின் வாயுளாக முளைக்கும் ரசிப்பு, பின்னாளில் காதலாக மலர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

“நோ” சொல்லும் ஆண்கள் :

பெண்களே முன்வந்து காதலை வெளிபடுத்தும் போது கூட, “நோ” சொல்லி விலகும் ஆண்களை பெண்கள் இரகசியமாக விரும்புவார்களாம்.

காம உணர்ச்சி :

அந்த விஷயத்தில் படு பயங்கரமாக ஈடுபாடு உள்ள ஆண்களை, வெளிப்படையாக, “ச்சே.. என்னடி அவன் இப்படி இருக்கான்..” என்று கூறினாலும். காதல் என்று வந்துவிட்டால், பெண்கள் அவர்களை தான் இரகசியமாக விரும்பி ரசிப்பார்களாம்.

சுதந்திரமாக இருப்பவர்கள் :

தானும், தன்னை சுற்றி இருப்பவர்களையும் சுதந்திரமாக, அவரவர் வேலைகளை செய்ய ஓகே சொல்லும் ஆண்களை, பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறதாம்.

பொறாமை :

அலுவலகம் அல்லது கல்லூரிகளில் பெரும்பாலான பெண்களாள் பொறாமையாய் பார்க்கப்படும் அழகான ஆண்களை, பெண்கள் இரகசியமாக விரும்புகிறார்கள். எங்கு நேரடியாக கூறினால், தன் மீது மற்றவர்கள் கோபம் கொள்வார்களோ என்ற அச்சம் பெண்கள் மத்தியில் இருக்கிறது.

கோபம் கொள்பவர்கள் :

அவ்வப்போது, பெண்கள் மீது செல்லமான, அக்கறையான கோபம் கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்குமாம். தங்கள் மீது கோபம் கொள்ளும் ஆண்களாக இருந்தாலும் சரி, அல்லது தங்கள் கண்ணெதிரே அவ்வாறு செல்லமான, அக்கறையான கோபம் கொள்ளும் ஆண்களாக இருந்தாலும் சரி, நாங்கள் அவர்களை இரகசியமாக விரும்புவோம் என்கிறது பெண்கள் அணி!!!

சோகத்தை மறைத்து சிரிக்கும் ஆண்கள் :

தங்களுக்குள் எவ்வளவு சோகம் இருந்தாலும், அது மற்றவர்களை பாதிக்கக் கூடாது என்று, தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்விக்கும் ஆண்களை பெண்கள் இரகசியமாக விரும்பிகிறார்கள்.

பெண்மையை மதிக்கும் ஆண்கள் :

தாங்கள் ஆண்கள் என்ற அகம்பாவம் இன்றி, தங்களை சுற்றியுள்ள பெண்களை மட்டுமின்றி அவர்களுக்குள் இருக்கும் பெண்மையையும், அவர்களுக்கான இடத்தினை சமூகத்தில் நிலைநாட்டும் சில மனிதகுல மாணிக்கங்களை பெண்கள், ஏகபோகமாக விரும்புகிறார்களாம்.

உடுத்தும் உடை

ஆண்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறு, உடுத்தும் உடையில் கோட்டை விடுவது என்ற பேச்சு இருந்து வந்தது. ஆனால் அது சென்ற நூற்றாண்டு வரை தான், பெண்களை மிஞ்சும் அளவிற்கு ஆண்கள் ஆடை உடுத்தும் வகையில் மேலோங்கியிருக்கின்றனர். கவர்ச்சியான உடையாக இல்லாவிட்டாலும், உடுத்தும் உடையை கட்சிதமாக உடுத்தும் ஆண்களை, பெண்கள் ஆவலாக ரசிக்கிறார்கள்.