ரஜினியிடம் பணம் பறிக்க முயற்சி செய்யவில்லை: பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா மறுப்பு

ரஜினியிடம் பணம் பறிக்க முயற்சி செய்யவில்லை: பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா மறுப்பு

டைரக்டர் கஸ்தூரிராஜா மீது சினிமா பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா ஐகோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரஜினி பெயரை சொல்லி கடன் வாங்கி ஏமாற்றி விட்டார் என்றும் போலீசில் புகார் செய்துள்ளார். இதற்கு கோர்ட்டில் ரஜினி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கெட்ட எண்ணத்துடன் போத்ரா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் பணம் பறிக்கவும் முயற்சிக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து முகுன்சந்த் போத்ரா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

நான் பணம் பறிக்க முயற்சிப்பதாக ரஜினி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இது எனது மனதை புண்படுத்தி உள்ளது. நான் எப்போதும் ரஜினியிடம் பணம் கேட்டது இல்லை. பணம் பறிக்க முயற்சித்ததும் இல்லை.

கஸ்தூரி ராஜாதான் ரஜினி பெயரை பயன்படுத்தி என்னிடம் கடன் பெற்றார். அவரைத்தான் ரஜினி கண்டிக்க வேண்டும். என் மீது அவதூறு சொல்வது சரியல்ல.

நான் பணம் தரவில்லை என்றால் என் சம்பந்தி கொடுத்து விடுவார் என்று கஸ்தூரிராஜா உறுதியளித்ததால்தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். பணம் பறிக்க முயற்சிப்பதாக சொன்ன வார்த்தையை ரஜினி வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.