சாவு வரும் வரை காத்திருப்பது சோம்பேறித்தனம்

இரண்டாம்உலகப்போரில் ஹிட்லரின் தோளோடு தோள் கொடுத்து உதவிய தோழன் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி. போரில் தோற்ற பிறகு ஒரு வானில் ஏறி சுவிஸ் எல்லையை கடந்து தப்பிக்க முசோலினி முயன்றார்.

கூடவே தனது இணை பிரியா காதலி கிளாரா பெட்டாசியையும் அழைத்துச் சென்றார்.

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் கியாசோ எல்லையை கடக்க முயன்றபோது அவர்களை புரட்சிப் படை தடுத்து நிறுத்தியது. முசோலினியை அடையாளம் கண்டு கொண்டு காதலியோடு சேர்த்து அவரை கீழே இறக்கினார்கள். “இவனை கைது செய்து நேச நாடுகளிடம் ஒப்படைத்து விடலாம்” என்று பலரும் கூறினார்கள். முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்த முசோலினி அவர்கள் முன் மண்டியிட்டு,

”என்னை கொல்லாதீர்கள்.” என்று கெஞ்சினார். எப்படிப்பட்ட சர்வாதிகாரிக்கும் உயிர் பயம் இருக்கும் போல… முசோலினியின் நீள்காற்சட்டை சிறுநீரால் நனைந்திருந்தது.

எதிரேநின்ற இளைஞர்கள் முசோலினியையும், அவர் காதலியையும் சல்லடையாக துளைத் தெடுத்தார்கள். அவர்கள் உடலை மிலான் நகரில் நடுவீதியில் போட்டார்கள். ஒரு சாமானியப்பெண் முசோலினியின் முகத்தில் காறித் துப்பினாள். பிறகு நிறைய பெண்கள் வந்து துப்பினார்கள்.

இளைஞர்கள் சிலர் சுற்றிலும் நின்று முசோலினியின் உடல்மீது சிறுநீர் கழித்தார்கள். பின் மிலான் நகரில் உள்ள 7 வீதிகள் சந்திக்கும் லொறெத்தோ எனும் ஏழ்சந்தியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பும் நிலைய வாயிலில் தலை கீழாக தொங்கவிட்டு போய்விட்டார்கள். முசோலினி யின் கொடூரமான முடிவு ஹிட்லருக்கு தெரிய வந்தது. அப்போதே அவர் உடல் நடுங்கியது. “இந்த கொடூர முடிவு எனக்கு வரக் கூடாது. நான் இறந்தவுடன் என் உடலை எரித்து விடுங்கள்.

என் சாம்பல் கூட எதிரிகள் கையில் கிடைத்து விடக்கூடாது. “சத்தியம் செய்து கொடுங்கள் என்று தன் உதவியாளர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். அப்போதே அவரது இறுதிநேரம் நெருங்கி இருந்தது. ஹிட்லர் ஏதாவது ஒரு அரபு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்கலாம். யூதர்களை கொன்றதால் அரபு நாடுகள் இவரை வரவேற்று இருக்கும். ஆனால், ஹிட்லருக்கு கடைசி வரை அந்த எண்ணம் இல்லை.

“எந்த விளைவுகளையும் சந்திக்கும் துணிவு ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டும். நான் வாழ்ந்த இடம் இது. இங்கிருந்தபடியே என் முடிவை சந்தித்துக்கப் போகிறேன். நாளை.. கோடிக்கணக்கான மக்கள் என்னை சபிக்கப்போகிரார்கள் என்பது எனக்குதெரியும். விதி அப்படியொருநிலையை எனக்கு தந்து விட்டது” என்று சொன்னார் ஹிட்லர். தனது காதலி ஈவாபிரானுடன் கைகோர்த்தவாறு மெல்ல உள்ளறைக்கு நடந்தார். இரு வரும் சோபாவில் அமர்ந்தனர்.

ஈவா முதலில் சயனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்

ஹிட்லர் தன் கைத் துப்பாக்கியை எடுத்து வலது நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹிட்லர் விருப்பபடி அவர்களின் உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. உடலின் சாம்பலை சிறுகோணிப்பையில் சேகரித்து, மண்ணை ஆழமாக தோண்டிப் புதைத்தார்கள். சாம்பல் கூட எதிரிகளுக்கு கிடைக்கவில்லை. ஹிட்லரின் விருப்பப்படி தான் அவரது மரணமும் நிகழ்ந்தது

காலம் வரும் போது காலதேவன் வருவான் என்று தெரிந்தும் காலைத்தூக்கி மற்றவன் தலையில் மிதிப்பவர்கள் காலனைக்கண்டு எதற்கு அஞ்ச வேண்டும்?
சிலர் அதற்காக தங்களை தயார் பண்ண வேண்டியது காலத்தின் தேவை இப்போது!!!

hitler