பாகுபலி போல் எதிரொலிக்கும் விஷாலின் பாயும்புலி: லிங்குசாமி

பாகுபலி போல் எதிரொலிக்கும் விஷாலின் பாயும்புலி: லிங்குசாமி

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாயும் புலி’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இப்படத்தின் ‘சிலுக்கு மரமே…’ என்னும் பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது. இதில் விஷால், சுசீந்திரன், பாண்டிராஜ், லிங்குசாமி, ஜெயபிரகாஷ், கேமராமேன் வேல்ராஜ், இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ஆண்டனி, சூரி, வேந்தர் மூவிஸ் சிவா, வி மியூசிக் ஐஸ்வர்யா, ஆடை வடைவமைப்பாளர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த சிங்கிள் ட்ராக்கை லிங்குசாமி வெளியிட பாண்டிராஜ் பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது, என் படங்களில் மிகவும் சூப்பர் ஹிட்டான ‘நான் மகான் அல்ல’ பட வரிசையில் ‘பாயும் புலி’ படமும் அமையும் என்றார்.

இமான் பேசும்போது, ‘இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. எல்லா பாடல்களுமே சிறப்பாக வந்திருக்கின்றன. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இந்த அணியுடன் பணி புரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது’ என்றார்.

லிங்குசாமி பேசும்போது, ‘பாயும் புலி’ என்று சொல்லும்போது ‘பாகுபலி’ போல் எதிரொலிக்கிறது. சூப்பர் ஹிட்டாகி வரும் ‘பாகுபலி’ படம் போல் இப்படமும் வெற்றி பெறும். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான மற்ற படங்களைப்போன்று இந்தப் படமும் தரமான படமாக இருக்கும், என்றார்.

பாண்டிராஜ் பேசும்போது, ‘சுசீந்திரன் மிகவும் வேகமான இயக்குனர். ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ படம் போல் இந்தப்படமும் சூப்பர் ஹிட்டாகும். ‘பாயும் புலி’ படத்தை நான் பார்த்து விட்டேன். எல்லோர் மத்தியிலும் இப்படம் பேசக்கூடிய படமாக இருக்கும்’ என்றார்.

மதன் பேசும்போது, விஷாலின் வெற்றி பட வரிசையில் இப்படமும் இடம் பெறும் என்றார்.

விஷால் பேசும்போது, ‘பாயும் புலி’ படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது. படத்தை செப்டம்பர் 4ம் தேதி வெளியிட இருக்கிறோம். என்னை பொருத்த வரை ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மக்கள் மனதில் பதிய வேண்டும். அப்படி படிந்தால்தான் அது ஒரு நல்ல படமாக இருக்கும். அந்த வகையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் மக்கள் மனதில் கண்டிப்பாக பதியும். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளது. இதில் குறிப்பாக ‘யார் இந்த முயல் குட்டி..’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எல்லாருக்கும் இப்படம் பிடிக்கும் என்றார்.