தமிழக வெள்ள நிவாரணத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கிய ஹிருத்திக் ரோஷன்

தமிழக வெள்ள நிவாரணத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்கிய ஹிருத்திக் ரோஷன்

தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

திரை நட்சத்திரங்களும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் திரையுலம் மட்டுமில்லாது பாலிவுட் நடிகர்களும் ஏராளமான பொருட்களை அனுப்பியும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணமும் அனுப்பி வருகின்றனர். தற்போது ஹிருத்திக் ரோஷன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளார். மேலும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.