ரஜினியால் மட்டுமே இது சாத்தியம்: ஆச்சர்யத்தில் நாசர் மகன்

ரஜினியால் மட்டுமே இது சாத்தியம்: ஆச்சர்யத்தில் நாசர் மகன்

நாசரின் இளைய மகள் லூத்புதீன் பாட்சா. இவர் தமிழில் ‘சைவம்’, ‘இது என்ன மாயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரஜினியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார். அப்போது ரஜினி சொன்ன விஷயம் இவரை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ரஜினியை அவர் சந்தித்தபோது, ரஜினி இவரிடம் பத்து வருடங்களுக்கு முன்னரே உங்களை ‘சந்திரமுகி’ படப்பிடிப்பின்போது சந்தித்தோமே ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டாராம். சிறுவனாக இருந்தபோது ரஜினியை சந்தித்ததை மறந்துவிட்ட லூத்புதீனுக்கு, ரஜினி இன்னமும் தன்னை ஞாபகதில் வைத்திருந்தது ஆச்சர்யத்தை கொடுத்ததாம். இந்த அளவுக்கு ஞாபக சக்தியுடன் இருப்பது ரஜினி ஒருவருக்கு மட்டுமே சாத்தியம் என்று தனது நட்பு வட்டாரத்தில் புகழ்ந்து வருகிறாராம் லூத்புதீன். லூத்புதீன் தற்போது ‘பறந்து செல்லவா’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படம் வெற்றியடைய மனதார ரஜினி வாழ்த்தியதாகவும் கூறுகிறார். ரஜினியை தான் சந்தித்தது மிகவும் நெகிழ்ச்சியான ஒரு சம்பவமாக இருந்தது என்றும் கூறுகிறார்.

The post ரஜினியால் மட்டுமே இது சாத்தியம்: ஆச்சர்யத்தில் நாசர் மகன் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
ரஜினியால் மட்டுமே இது சாத்தியம்: ஆச்சர்யத்தில் நாசர் மகன்