என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண் கலங்கிய அருண் விஜய்

yennai_arunஎன்னை அறிந்தால் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு அருண் விஜய் திரையரங்கிலேயே கண் கலங்கி உள்ளார்.
அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக், அருண் விஜய் உட்பட பலர் நடிக்க, கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் என்னை அறிந்தால். இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் ஒளிபரப்பானது.
இந்தக் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து காண்பதற்காக அருண் விஜய், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஐஸ்வர்யா உட்பட ஒருசில திரையுலக பிரபலங்கள் காசி தியேட்டருக்கு வந்திருந்தார்கள். இப்படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் அருண் விஜய் நடித்திருக்கிறார். அருண் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. படம் முடிந்து வெளியே வந்ததும் அருண் விஜய்யைப் பார்த்து மொத்த அஜித் ரசிகர்களும் ‘‘விக்டர்… விக்டர்…’’ என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ரசிகர்கள் அருகே வந்து கைகுலுக்கி நன்றி தெரிவித்தார் அருண் விஜய். அவரை அருகில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
என்னை அறிந்தால் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு மிரண்டு போன அருண் விஜய் திரையரங்கிலேயே கண் கலங்கி உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அருண் விஜய் கூறுகையில், “அஜித் சாருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. திரையில் எனக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த வெற்றி அஜித் இல்லாமல் சாத்தியமில்லை” என்று கூறியிள்ளார். இதேபோல் மற்றொரு டுவிட்டில் “எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த கௌதம் மேனனுக்கு பெரிய நன்றி” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply