பிரபு சாலமனுடன் இணையும் தனுஷ்?

தனுஷ் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தியில் ‘அனேகன்’ படத்திலும், பாலிவுட்டில் பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.
மாரி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கயல்’. இதில் சந்திரன் நாயகனாகவும் ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். காதல் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். புதிய ஸ்கிரிப்டை எழுதி விட்டதாகவும், இதில் தனுஷ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply