கோ இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா

921358bf-0af3-4866-a9c9-15985461b27a_S_secvpfகே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘கோ’. அரசியல் பின்னணியில் திரில்லர் படமாக வெளிவந்த இப்படத்தில் ஜீவா-கார்த்திகா நாயர் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் 2011-ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், அதே நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது. ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா ஹீரோவாகவும், டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி ஹீரோயினாகவும் நடிக்கவிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். சரத் என்பவர் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கின்றனர். ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக பாபி சிம்ஹா தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதையடுத்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது, இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply